'சைபர்' மதிப்பு! சமூக வலைதள 'மூடுமந்திரம்' மாயமாகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 17, 2019

'சைபர்' மதிப்பு! சமூக வலைதள 'மூடுமந்திரம்' மாயமாகிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'சைபர்' என்றால் கணிதத்தில் பூஜ்யம். ஆனால், டிஜிட்டல் உலகில், 'சைபர்' என்றால், அதற்கு எல்லையில்லா மதிப்பு. அதிகரித்து வரும் 'சைபர்' குற்றங்களை தடுக்க, கல்லுாரி மாணவ மாணவியருக்கு, சக மாணவ, மாணவியர் மூலம் விழிப்புணர்வு ஊட்ட புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.விரும்பிய கருத்தை யாருடைய குறுக்கீடும் இல்லாமல் தெரிவிப்பதற்கான ஊடகமாக சமூக வலைதளங்கள் விளங்குகின்றன. பிரத்யேக மெயில் ஐ.டி., மற்றும் மொபைல் எண் இருந்தால் போதும், 'பேஸ்புக்', வாட்ஸ்-அப், 'டிவிட் டர்', 'இன்ஸ்டாகிராம்' உள்ளிட்டவற்றில் எளிதாக கணக்கு துவங்கலாம்.பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பலர் விளையாட்டாக, இவற்றில் கணக்கு துவக்கி பொழுதை கழிப்பதோடு, விரும்பத்தகாத பிரச்னைகளில் சிக்கியும் கொள்கின்றனர். இப்பிரச்னைகள், குடும்பத்திற்குள்ளும், சமூகத்திற்குள்ளும் சிக்கலை ஏற்படுத்துகிறது.சென்னையில் ஸ்வாதி கொலையில் துவங்கி, தற்போது 'டிக் டாக்' வீடியோக்களால் நடந்த கொலைகள் வரை ஏராள மான சம்பவங்களை உதாரணமாகக் கூறலாம். சமூக வலைதளம் மூலம், முன்பின் தெரியாத நபர்களுடன் ஏற்படும் நட்பு, கடைசியில் தற்கொலை, கொலை போன்றவற்றில் கொண்டு சென்று விடுகின்றது.
சமீபத்தில், பொள்ளாச்சியில் இளம்பெண்களை மயக்கி, ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டிய சம்பவம், கொடூரத்தின் எல்லை.பிரச்னைகளை சந்திக்கும் போது, சமாளித்து நகர்ந்து செல்வதைத் தவிர்த்து, அதீத மன அழுத்தத்தால், தவறான முடிவுக்கு பலர் தள்ளப்படுகின்றனர். பிரச்னையை தவிர்த்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள திருப்பூர் மாவட்ட போலீசார் புதிய முயற்சி மேற்கொண்டு உள்ளனர். கல்லுாரி மாணவ, மாணவியருக்கு 'சைபர்' குற்றங்கள் குறித்த பாடம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.கல்லுாரி வாயிலாகவிழிப்புணர்வுதிருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஸ்டேஷன்கள் உள்ள பகுதியில், அரசு, தனியார் கல்லுாரிகளில் 'சைபர் கிரைம்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.முதலில், கல்லுாரியில் இருந்து பத்து பேருக்கு, இதுகுறித்து பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் மூலம், அக்கல்லுாரியில் படிக்கும், ஆர்வமுள்ள மாணவ, மாணவியர், நுாறு பேருக்கு பயிற்சி அளித்து, இவர்கள் மூலம், கல்லுாரியில் உள்ள அனைவருக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு வகுப்பு நடத்த மாவட்ட போலீசார் முடிவு செய்துள்ளனர்.கல்லுாரிக்கு நுாறு பேர்திருப்பூர் எஸ்.பி., கயல்விழி கூறுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லுாரிகளில் 'சைபர் கிரைம்' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சமீபத்தில் ஆலோசிக்கப்பட்டது.
முதல்கட்டமாக, கல்லுாரியில் பயிலும் மாணவ, மாணவியர் மூலமாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.''சமூக வலைதளங்களை எப்படி பயன்படுத்துவது, 'சைபர்' குற்றங்களில் சிக்காமல் இருக்க அறிவுரை வழங்குவது முக்கிய அம்சம். பயிற்சி பெறும், மாணவ, மாணவியர் தங்களது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களிடம் எளிதாக கொண்டு சேர்க்க முடியும். இத்திட்டம், ஒன்றிரண்டு வாரங்களில் வர உள்ளது'' என்றார்.இதன்மூலம் 'மூடுமந்திரமாக' இருந்த சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு, அனைவர் மத்தியிலும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews