👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குடிநீர் கேட்டு கொருக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் மக்கள் குடிநீருக்காக அல்லாடி வருகின்றனர். குடிநீர் கேட்டு பல இடங்களில் மக்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் பிரச்னை காரணமாக கொருக்கை அரசு பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் இன்று காலை போராட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொருக்கையில் உள்ள அரசு பால்டெக்னிக் கல்லூரியில் 5 பாடபிரிவில் 210 மாணவிகள் உட்பட 700 மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லூரி துவங்கி பல ஆண்டுகள் ஆகியும், இதுவரை குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. கல்லூரி நிர்வாகம் சார்பில் குடிநீர் வெளியில் இருந்து கொண்டு வந்து டேங்க்கில் நிரப்பப்படும். அதனை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வந்தனர். தற்போது திருத்துறைப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன்காரணமாக கடந்த சில வாரங்களாக பாலிடெக்னிக் கல்லூரிக்கு குடிநீர் கொண்டுவரப்படவில்லை. இதனால் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இன்று காலை வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் வசதி உடனே செய்து தர வேண்டும், மேலும் கல்லூரிக்கு அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். சிறிது நேரம் போராட்டம் நடத்தி விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U