ஓய்வூதியத்தில் பணம் பிடித்தம் செய்வது தொடர்பாக கருவூல அலுவலர் பிறப்பித்த ஆணையை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 28, 2019

ஓய்வூதியத்தில் பணம் பிடித்தம் செய்வது தொடர்பாக கருவூல அலுவலர் பிறப்பித்த ஆணையை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு ஊழியருக்கு கூடுதலாக வழங்கப்பட்ட ஊதியம்,ஓய்வூதியத்தை திரும்ப வசூலிக்க வழிகாட்டு நெறிகளை வகுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. 81 வயதாகும் சுப்புராஜின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் ஓய்வூதியதில் பணப்பிடித்தும் செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். அரசு ஊழியர், பென்ஷனர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட பணத்தை வசூலிக்க ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை ஏற்படுத்த அரசுக்குஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், பேரையூர் கெஞ்சம்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:பெருமாள்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி, கடந்த 30.9.1996ல் ஓய்வு பெற்றேன். எனக்கு சம்பளம் மற்றும் பென்ஷன் நிர்ணயம் செய்த போது, கூடுதலாக நிர்ணயம் செய்து விட்டதாகவும், அந்த பணத்தை எனது பென்ஷனில் பிடித்தம் செய்ய வேண்டுமென கருவூலத்துறை அலுவலர் கடந்த 15.10.2015ல் உத்தரவிட்டார். இதன்படி, ரூ.6,152 பிடித்தம் செய்யப்பட்டது. நான் முதுமையில் உள்ளேன். எனக்கு வேறு வருமானம் இல்லை. எனவே, எனது பென்ஷனில் பிடித்தம் செய்யும் உத்தரவை ரத்து செய்து, பணத்தை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தார். ‘‘மனுதாரருக்கு 81 வயதாகிறது. இந்த நேரத்தில் அவரது பென்ஷனில் பிடித்தம் செய்வது என்பது அவரது இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். மக்கள் செலுத்தும் வரிப்பணம், கருவூலத்தில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதைக் கொண்டே சம்பளம், பென்ஷன் வழங்கப்படுகிறது. அதே நேரம் குரூப் 3 மற்றும் குரூப் 4 நிலையிலுள்ள பணியாளர்களுக்கு கூடுதலாக கணக்கிட்டு சம்பளமோ, பென்ஷனோ வழங்கப்பட்டிருந்தால், அதை அவர்களிடம் பிடித்தம் ெசய்யத் தேவையில்லை என ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகத்திலுள்ள ஒரு ஆவணம் திருடப்பட்டாலோ, தொலைந்து போனாலோ அதற்கு சம்பந்தப்பட்ட ஊழியரே பொறுப்பு. இதைப்போல சம்பளமோ, பென்ஷனோ கூடுதலாக கணக்கிடப்பட்டிருந்தால், இதற்கு கணக்கிட்டவரே பொறுப்பு. எனவே, மனுதாரரின் பென்ஷனில் பிடித்தம் செய்யும் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரின் சம்பளம், பென்ஷன் நிர்ணயம் செய்ததில் தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இதனால் ஏற்பட்ட இழப்பை சம்பந்தபட்டவர்களிடம் இருந்து வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக வழங்கப்பட்ட சம்பளம் மற்றும் பென்ஷனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட அந்த பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிப்பது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுக்கும் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்களை தலைமை செயலர் பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். சம்பளமோ, பென்ஷனோ கூடுதலாக கணக்கிடப்பட்டிருந்தால், இதற்கு கணக்கிட்டவரே பொறுப்பு.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews