ஆசிரியர் போராட்டம்: முதல்வருக்கு அடுத்த தலைவலி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 17, 2019

ஆசிரியர் போராட்டம்: முதல்வருக்கு அடுத்த தலைவலி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டாக்டர்கள் போராட்டத்தை அடுத்து மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் போராட்டம் வெடித்துள்ளது. இது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த தலைவலியாக மாறியுள்ளது. டாக்டர்கள் போராட்டம் : மேற்குவங்கத்தில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக டாக்டர்கள் பாதுகாப்பு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இன்று (ஜூன் 17)ல், நாடு முழுவதும் டாக்டர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். தீவிரம் : கோல்கட்டா மருத்துவமனை ஒன்றுக்கு போராடும் மருத்துவர்களை சந்திக்க சென்ற மம்தா, அவர்களது கோரிக்கைகளை கேட்காமல், பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல், 4 மணி நேர கெடு விதித்து எச்சரித்திருந்தார். இது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
ஆசிரியர்களும் போராட்டம் : இந்த நிலையில், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு வங்கத்தில் ஆசிரியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கோல்கட்டாவின் விகாஸ் பவன் முன்பாக ஊர்வலம் நடத்திய ஆசிரியர்களுக்கும், போலீசாருக்கம் இடையில் மோதல் வெடித்தது. மம்தா அதிர்ச்சி : தொடர்ந்து ஆசிரியர்கள் மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் நடத்த ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது மம்தாவின் நிர்வாகத்திற்கு மேலும் தலைவலியாக மாறியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews