👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஒன்றரை வயது குழந்தை 1 நிமிடத்தில் 30 நாடுகளில் பெயரைக் கூறி உலக சாதனை படைத்துள்ளது.
உத்தமபாளையத்தை சேர்ந்த வருசை பீர் முகமது-நபிலா பேகம் தம்பதியரின் ஒன்றரை வயது ஆண் குழந்தை முகமது நதீன்.
இக்குழந்தை, தேசியக் கொடிகளைப் பார்த்து ஒரு நிமிடத்தில் 30 நாடுகளின் பெயர்களைக் கூறி உலக சாதனை படைத்துள்ளது.
குழந்தைகளின் சாதனைகளை கௌரவப்படுத்தி பாராட்டு சாதனை சான்றிதழ் வழங்கி வரும் ராமநாதபுரத்தை சேர்ந்த வில் மெடல்ஸ் ஆப் வேல்டு ரெக்கார்ட் அட்டம்ட் என்ற தொண்டு நிறுவனம் இந்த குழந்தையின் சாதனையை பதிவு செய்துள்ளது.
இதற்கு முன்பு இதே சாதனையை இரண்டரை வயது குழந்தை செய்ததே உலக சாதனையாக இருந்துள்ளது.
உத்தமபாளையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், தொண்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் செயலாளருமான ஏ.தமிழ்ச்செல்வி அக்குழந்தைக்கு உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U