டிஜிபி பதவிக்கு 5 பஞ்சாப் அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரைத்த யு.பி.எஸ்.சி: தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 27, 2019

டிஜிபி பதவிக்கு 5 பஞ்சாப் அதிகாரிகளின் பெயர்களை பரிந்துரைத்த யு.பி.எஸ்.சி: தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் என்று எதிர்பார்ப்பு நிலவும் சூழலில் மத்திய பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி) பஞ்சாப்பை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர்களை அந்த பதவிக்கு பரிந்துரைத்துள்ளது தமிழக அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழக டிஜிபியாக பதவி வகித்து வரும் டி.கே.ராஜேந்திரனின் பணிக்காலம் வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, டிஜிபி பதவிக்கு தகுதியுடையவர்களின் பட்டியலை தமிழக அரசு மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து தலைமை செயலாளருக்கு ஐ.பி.எஸ் அதிகாரிகளை பரிந்துரைக்கும் கோப்பு வந்து சேர்ந்துள்ளது.
கோப்பில் பஞசாப் மாநிலத்தை சேர்ந்த 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மத்திய பணியாளர் தேர்வாணய அதிகாரிகள் கவனக்குறைவாக கோப்பினை அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மூத்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பெயர் கொண்ட புதிய கோப்பினை செவ்வாய் அன்று இரவு மத்திய பணியார் தேர்வாணயம் தலைமை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளது. எனவே, இன்றைய தினமே புதிய டிஜிபி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews