👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எழுத்து தேர்வு வாயிலாக, மின் வாரியம், 400 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப, முடிவு செய்துள்ளது.தமிழக மின் வாரியம், 3,000 பிரிவு அலுவலகங்களுடன் செயல்படுகிறது. அந்த அலுவலகங்களில் தான், புதிய மின் இணைப்பு, மின் வினியோக பணிகள் கவனிக்கப்படுகின்றன. அவை தலா, ஒரு உதவி பொறியாளரின் கீழ் இயங்குகிறது. தற்போது, உதவி பொறியாளர் உட்பட, பல ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மின் வினியோக பணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில், எலக்ட்ரிக்கல் பிரிவில், 300; மெக்கானிக்கல், சிவில் ஆகிய பிரிவுகளில், தலா, 50 என, மொத்தம், 400 உதவி பொறியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். எழுத்து தேர்வு நடத்தி, அதில், அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு, அரசு இட ஒதுக்கீட்டு அடிப்படையில், மின் வாரியம் வேலை வழங்க உள்ளது. இதற்கான அறிவிப்பு, விரைவில் துவங்க உள்ள, சட்டசபை கூட்டத்தொடரில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U