உள் கட்டமைப்பு குறைந்த கல்லுாரிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 27, 2019

உள் கட்டமைப்பு குறைந்த கல்லுாரிகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உள் கட்டமைப்பு குறைவால், தண்டனை பெற்ற கல்லுாரிகளின் விபரங்களை, அண்ணா பல்கலையின் இணையதளத்தில், உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று, 550க்கும் மேற்பட்ட கல்லுாரிகள், அண்ணா பல்கலை இணைப்பில் உள்ளன. இந்த கல்லுாரிகளுக்கான, அங்கீகாரம் மற்றும் இணைப்பு அந்தஸ்துக்கு விண்ணப்பிக்கும் போது, கல்லுாரியின் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வு செய்யப்படும்.அதன்படி, அண்ணா பல்கலையின் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ள கல்லுாரிகளில், இந்த ஆண்டு, அண்ணா பல்கலை, சென்னை, ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., பேராசிரியர்கள் அடங்கிய குழுவினர், வளாக ஆய்வு நடத்தினர்.வசதிகள் குறைவுஇதில், சில கல்லுாரிகளில், ஆய்வகம் மற்றும் நுாலக வசதிகளில் குறைபாடுகள் இருந்தன.அதே போல், தொழில்நுட்ப வசதிகள் குறைவு, கழிப்பறை, குடிநீர் வசதி என, அடிப்படை உள்கட்டமைப்புகளிலும் குறைவாக இருந்த, கல்லுாரிகள் கண்டுபிடிக்கப்பட்டன.அவற்றை சரி செய்து அறிக்கை தர, கல்லுாரிகளுக்கு ஆய்வு கமிட்டி உத்தரவிட்டது. இதில், பல கல்லுாரிகள் உள்கட்டமைப்பை மேம்படுத்தவில்லை.
இதையடுத்து, உள் கட்டமைப்பில் பிரச்னைக்குள்ளான, 92 கல்லுாரிகளுக்கு, மாணவர் சேர்க்கைக்கான இடங்களை குறைத்து, அண்ணா பல்கலை உத்தரவிட்டு உள்ளது.உத்தரவுஅந்த கல்லுாரிகள் எவை என்ற விபரங்களை வெளியிட, பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து, அண்ணா பல்கலைக்கு உயர்கல்வித் துறையும் உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து, தண்டனை பெற்ற கல்லுாரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலை நிர்வாகம், இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஆனால், இதில் சாதாரணமாக கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, 553 கல்லுாரிகளின் பட்டியலில், 92 கல்லுாரிகளையும் இடம் பெற செய்துஉள்ளது.தண்டனைக்குள்ளான கல்லுாரிகள் குறித்து, ஒரு வரியில் மிகவும் சிறிய எழுத்துகளில், கல்லுாரி பட்டியலில் அண்ணா பல்கலை குறிப்பிட்டுள்ளது. ஆனாலும், கல்வியாளர்களும், பேராசிரியர்களும், இந்த கல்லுாரிகளின் விபரங்களை தனித்தனியாக திரட்டியுள்ளனர்.இந்த ஆண்டு கவுன்சிலிங் வழியே சேரும் மாணவர்கள், தங்களின் கல்லுாரி தண்டனை பெற்ற கல்லுாரியா என்பதை ஆய்வு செய்து கொள்ளும்படி, பேராசிரியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews