👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை அரசு இன்னும் விலக்கி கொள்ளாததால் மீண்டும் போராட்டத்தில் குதிப்பதா, அல்லது வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வதா என முடிவெடுக்க ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உயர்மட்டக்குழு வரும் 30ம் தேதி சென்னையில் நடக்கிறது என ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறினர்.இதுகுறித்து ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு கூறுகையில், புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைகளுக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதற்காக எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு ரத்து செய்யும் என எதிர்பார்த்தோம். ஆனால் இன்னும் ரத்து செய்யவில்லை.
இதன் விளைவாக தற்போது ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு பறிக்கப்பட்டுள்ளது. ஜூனியர்களுக்கு அரசு பதவி உயர்வு வழங்கி பழிவாங்குகிறது. இதனால் பதவி உயர்வு கிடைக்காதவர்களுக்கு மாதம் ₹1000 இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் இழப்புகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏற்க முடியாது. இதுதொடர்பாக பேசி முடிவெடுக்க வரும் 30ம் தேதி சென்னையில் கூட்டம் நடைபெறுகிறது. அரசு எங்களை
அழைத்து பேசி சுமுக தீர்வு ஏற்படாவிட்டால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என உயர்மட்ட குழுவில் பேசி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U