👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள கிளர்க் பணியிடங்களுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது முதல்நிலை தேர்வுக்கு அட்மிட் கார்டு வெளியாகியுள்ளது. எஸ்பிஐ வங்கி கிளரிக்கல் எனப்படும் சுமார், 8600-க்கும் மேற்பட்ட ஜூனியர் அசோசியேட் (கஸ்டர்மர் சப்போர்ட் மற்றும் சேல்ஸ்) பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி மே 3ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது முதல்நிலைத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கான அட்மிட் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. ஐபிபிஎஸ்-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (அல்லது) பின்வரும் இணைப்பை கிளிக் செய்து நேரடியாக அட்மிட் கார்டினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும். முதல்நிலை தேர்வு ஜூன் 22-ம் தேதியன்றும், 23ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. பிரதானத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U