தனியார் பள்ளிகளில் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 19, 2019

தனியார் பள்ளிகளில் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்த தமிழக அரசு திட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள 25 விழுக்காடு இடங்களை ஆன்லைன் மூலம் நிரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் உள்ள 25 விழுக்காடு இடங்கள், சமூகத்தில் நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் ஏகப்பட்ட தில்லுமுல்லு நடப்பதாகப் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
25 விழுக்காடு இடங்கள் தகுதியான மாணவர்களைச் சென்றடைவதில்லை என்றும், அந்த இடங்கள் விலைக்கு விற்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கு கடந்த மாதம் 22ஆம் தேதி இன்று இரவு வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. மொத்தமுள்ள ஒரு லட்சத்து 21 ஆயிரம் இடங்களில், தற்போது வரை ஒரு லட்சத்து 17 ஆயிரம் இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இதற்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து திங்கள் கிழமை அன்று கூடி பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. தில்லுமுல்லு நடப்பதைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் பொருட்டும் ஆன்லைன் கலந்தாய்வு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews