திண்ணை பள்ளியை காப்பாற்ற தீவிரம்! கல்வித்துறை அதிகாரிகள் திணறல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 02, 2019

திண்ணை பள்ளியை காப்பாற்ற தீவிரம்! கல்வித்துறை அதிகாரிகள் திணறல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சேவூர் சாலையப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டுமானம் உருவாக்குவதில் தீர்வு காண முடியாமல், கல்வித்துறை அதிகாரிகள் திணறுகின்றனர்.அவிநாசி ஒன்றியம், சேவூர் ஊராட்சி, சாலையப்பாளையத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. சாலையப்பாளையம், ராயம்பாளையம் உட்பட சுற்றுப்புறங்களில் உள்ள, ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 200 பேர் படிக்கின்றனர்.கடந்த, 1948ல், இப்பகுதி மக்கள் இணைந்து, இங்கு திண்ணை பள்ளிக்கூடம் கட்டினர். கருங்கல், சுண்ணாம்பு சேர்த்து கட்டப்பட்ட இக்கட்டட மேற்கூரையில், அழகிய வேலைபாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மாணவர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டன.பி.டி.ஏ., பள்ளி வளர்ச்சிக்குழுவின் முயற்சியால், சிமென்ட் கான்கிரீட் தரை தளம், நிலத்தடி நீர் தேக்க தொட்டி என, வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இடிப்பதற்கு மக்கள் எதிர்ப்புஇந்நிலையில், பழைய கட்டட சுவரில் விரிசல் ஏற்பட்டதால், கடந்தாண்டு மே மாதம், பாதுகாப்புக்கருதி, அக்கட்டடத்தை இடித்து, அங்கு புதிய கட்டடம் கட்ட, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது.
அதற்கான பணி துவங்கிய போது, ஊர் மக்கள் தெரிவித்தனர்; இதனால், இடிக்கப்பட்ட கட்டடம், அதே நிலையில் இருக்கிறது.பள்ளியின் பி.டி.ஏ., தலைவர் திருமூர்த்தி கூறியதாவது:சேவூர் கிராமத்தின் கடைகோடி கிராமத்தில், போக்கு வரத்து வசதி இல்லாத சுற்றுப்புற கிராமங்களில் உள்ள குழந்தைகள் இப்பள்ளியில் படிக்கின்றனர்.மாணவர்களுக்கு மைதான வசதி ஏற்படுத்த, பள்ளியை ஒட்டியுள்ள, 10 சென்ட் நிலத்தை குறைந்த விலையில் வழங்க, நில உரிமையாளர் தயாராக உள்ளனர்; நிலத்தை வாங்கி, மைதானம் அமைக்க முயற்சி செய்து வருகிறோம்.அதே நேரம், பாதி இடிக்கப்பட்ட நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டடம், இடத்தையும் பள்ளி பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, அந்த இடத்தில் புதிய கட்டடம் அமைக்க முயற்சி செய்து வருகிறோம்.
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை, மாவட்ட நிர்வாகம் உட்பட உயரதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.கட்டடத்தை காப்பாற்றணும்அவிநாசி ஒன்றியத்தின் முதல் திண்ணை பள்ளிக்கூடம் என்ற பெருமையை பெற்ற இப்பழங்கால கட்டடத்தை, பழமை மாறாமல் புதுப்பித்து பள்ளி கட்டடமாக செயல்படுத்த முயற்சி செய்திருக்கலாம். அல்லது மாற்று ஏற்பாடு செய்திருக்கலாம்.அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மாணவர் எண்ணிக்கையை தக்க வைத்துள்ள பள்ளியில் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்தாமல், மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித் துறையும் மவுனம் காப்பதும், எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கூட ஆர்வம் காட்டாமல் இருப்பதும், மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews