நீதிமன்றத்தில் போலி அறிக்கை அளித்த சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஆலோசகர் கைது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 04, 2019

நீதிமன்றத்தில் போலி அறிக்கை அளித்த சீருடைப் பணியாளர் தேர்வாணைய ஆலோசகர் கைது!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459



தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் போலி ஐஐடி பேராசிரியர் அறிக்கையை நீதிமன்றத்தில் அளித்து மோசடி செய்ததாக கேந்திரிய வித்யாலயா பள்ளி கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டு கைவிரல் ரேகை பிரிவில் உதவி ஆய்வாளர் பணிக்கு நடைபெற்ற தேர்வு தொடர்பாக, இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்துவரும் அருணாச்சலம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.



இதன் விசாரணையின்போது, சென்னை ஐஐடி பேராசிரியர் மூர்த்தி என கூறி போலி அறிக்கை அளித்து, நீதிமன்றத்தை ஏமாற்றியதாக, தேர்வு வினா-விடை தயாரிக்கும் குழுவில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி கணித ஆசிரியர் ஜி.வி.குமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சென்னை மத்திய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் ஜி.வி.குமாரை கைது செய்துள்ளனர்.



கைதான ஜி.வி.குமார், சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிகிறார்.


Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews