எல்கேஜியில் சிறுமியை பெயில் ஆக்கிய பள்ளி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 04, 2019

எல்கேஜியில் சிறுமியை பெயில் ஆக்கிய பள்ளி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

கற்றல் திறன் குறைவாக இருப் பதாகக் கூறி, தனியார் பள்ளியில் எல்கேஜி படித்த சிறுமியை யுகேஜிக்கு தேர்ச்சி செய்யாமல் நிறுத்தி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் வெளியானதை அடுத்து பள்ளி நிர்வாகம் சிறுமியை தேர்ச்சி செய்து சான்றிதழ் வழங்கியது.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஹேமாவதி. இவர்கள் தங்கள் பெண் குழந்தை யை அடையாறு பாரத் சீனியர் செகன்டரி பள்ளியில் கடந்த ஆண்டு எல்கேஜியில் சேர்ந்திருந்தனர். இந் நிலையில் எல்கேஜி படிக்கும் அந்த சிறுமியின் கற்றல் திறன் குறை வாக இருப்பதாகக் கூறி அவரின் தேர்ச்சியை பள்ளி நிர்வாகம் தடை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுயின் தாயார் ஹேமாவதி கூறியதாவது:

கடந்த மார்ச் 14-ம் தேதி பள்ளிக்கு வருமாறு நிர்வாகம் தரப்பில் அழைப்பு விடுத்தனர். நேரில் சென்றபோது எங்கள் குழந்தையின் கற்றல் திறன் குறைவாக இருப் பதால் அவரை யுகேஜிக்கு தேர்ச்சி செய்ய முடியாது என கூறினர். ‘தேர்ச்சி சான்றிதழ் போட்டுத் தாருங் கள், வேறு பள்ளிக்குச் சென்றுவிடு கிறோம்’ என கூறியதற்கும் சம்மதிக்கவில்லை.

அதற்கு மாறாக மீண்டும் எல்கேஜியில் படிக்கட்டும். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் பணம் மட்டும் கட்டினால் போதும். தாமதித்தால் உங்கள் குழந்தையின் இடம் வேறொருவருக்கு கைமாறி விடும் என பல்வேறு விதமாக பேசி எங்களை நிர்பந்தம் செய்து சம்மதிக்க வைத்தனர். தொடர்ந்து கல்விக் கட்டணமும் கட்டினோம். அப்போதுதான் எனது உறவினர் மூலம் எல்கேஜி படிக்கும் குழந்தை யின் தேர்ச்சியை தடை செய்ய முடியாது என தெரிந்தது. இதை யடுத்து பத்திரிகைகள் மூலம் தகவலை வெளியே கொண்டு வந்தோம்.


பள்ளி நிர்வாகம் விளக்கம்:

அதன்பின் பள்ளி நிர்வாகம் எங் களை அழைத்து பேசி நாங்கள் கட்டிய கட்டணத்தை திருப்பி அளித்தனர். மேலும், என் குழந் தையை தேர்ச்சி செய்து சான்றிதழ் அளித்தனர். தனியார் பள்ளிகளிடம் மாட்டிக் கொண்டு எங்களை போல பல பெற்றோர்கள் தவிக்கின்றனர். அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து பள்ளியின் முதல் வர் பிரேம் சாந்தா கூறும்போது, ‘‘பெற்றோரின் விருப்பத்தின் பேரிலேயே குழந்தையின் தேர்ச்சி நிறுத்தப்பட்டது. அவர்கள்தான் குழந்தையின் கற்றல் திறன் குறைவாக இருப்பதால், எல்கேஜி யிலேயே மீண்டும் படிக்க வைக்க வேண்டுமென வலியுறுத்தினர். அதற்கான கடிதத்தையும் எழுதித் தந்தனர். மற்றபடி விதிகளின்படியே பள்ளி செயல்பட்டு வருகிறது’’ என்றார். பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கேட்டபோது, ‘‘இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரி களிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அறிக்கை கிடைத்ததும் உரிய நட வடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
இதுகுறித்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் கூறும்போது, ‘‘இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை கட்டாய தேர்ச்சி செய்ய வேண்டும். ஆனால், விதிகளுக்கு முரணாக மாநிலம் முழுவதும் பல்வேறு தனியார் பள்ளிகள் திட்டமிட்டு குழந்தைகளின் தேர்ச்சியை நிறுத்தி பணம் சம்பாதிக்கின்றன. கல்வி வணிகமயமானதே இத்தகைய சம்பவங்களுக்கு காரணமாக உள் ளன.

இதை தவிர்க்க கட்டாய தேர்ச்சியை தனியார் பள்ளிகள் கண் டிப்பாக கடைபிடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தவறும் செய்யும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்‘‘ என்றார்.


Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews