👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வின் இரண்டாம் நாளில் 779 பேர் பங்கேற்றனர். அவர்களில் 422 பேருக்கு கல்லூரிகளில் சேருவதற்கான அனுமதி கடிதம் வழங்கப்பட்டது.
முதுநிலை மருத்துவ படிப்பில், 901 இடங்கள் நிரம்பின. ஜாதி ரீதியான ஒதுக்கீட்டுக்கு, இன்று கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., உள்ளிட்ட, முதுநிலை மருத்துவ படிப்புகளில், மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு, 1,073 இடங்கள் உள்ளன. வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், ஏப்ரல், 1ல் துவங்கியது.
இரண்டு நாட்களில், 736 இடங்கள் நிரம்பின. நேற்று நடந்த பொது பிரிவினருக்கான கவுன்சிலிங் கில் பங்கேற்ற, 747 பேரில், 165 பேர் இடங்கள் பெற்றனர். மூன்று நாட்களில், 901 இடங்கள் நிரம்பின. மற்ற பிரிவினருக்கான ஒதுக்கீட்டுக்கு, இன்று கவுன்சிலிங் நடைபெறுகிறது.
முதல்நாள் கலந்தாய்வில் அரசு கல்லூரிகளில் 283 பேர், தனியார் கல்லூரிகளில் 7 பேர் என மொத்தம் 290 பேர் மருத்துவப் படிப்புக்கான இடங்களைத் தேர்வு செய்தனர்.
மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டுக்கான எம்டிஎஸ் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்த மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்