வேலைவாய்ப்புக்கு படிப்புடன் தொழில்நுட்பமும் அவசியம் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 21, 2019

வேலைவாய்ப்புக்கு படிப்புடன் தொழில்நுட்பமும் அவசியம் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி ஆலோசனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
"படிப்புடன் தொழில்நுட்ப அறிவும், திறமையும் இருந்தால் தான் வேலைவாய்ப்புகள் சாத்தியமாகும்," என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார்.மதுரையில் தினமலர் சார்பில் நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் 'வேலைவாய்ப்பு ஆலோசனை' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது:தொழில்நுட்ப மாற்றங்கள் அசுர வேகத்தில் நடந்து வருகிறது. படித்து வெளியே வரும் நீங்கள் எதிர்காலத்தில் எந்த துறைகளில் வாய்ப்புகள், வளர்ச்சியும் உள்ளதோ அந்த துறைகள் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்வது தான் புத்திசாலி தனம்.ரோபோட்டிக் புராஸசிங் இன்ஜி., மற்றும் கம்ப்யூட்டர் விஷன் டெக்னாலஜி படிப்புகளுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் என்பது இருக்காது.
திறமையில்லா திண்டாட்டம் தான் தற்போது உள்ளது.மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் என எந்த படிப்பு படித்தாலும் திறமைகள், தொழில்நுட்பங்களை வளர்த்துக்கொண்டால் தான் வேலைவாய்ப்பு கிடைக்கும். படிக்கும் போது பாடத்திட்டங்களை தாண்டி படிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.பொருளியல், காமர்ஸ் படித்தாலும் தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். அதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.பல கல்லுாரிகளில் தற்போதைய பாடத் திட்டங்களுக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் அதிக இடைவெளி உள்ளதால் படித்த உடன் வேலை என்பது கனவாகிறது. படிப்புகளை தேர்வு செய்வதை விட அனைத்து வசதிகள் கொண்ட பாடத் திட்டத்தை தாண்டி விஷயங்களை கற்றுக்கொடுக்கும் கல்லுாரிகளை தேர்வு செய்வதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.பொறியியலில் கம்ப்யூட்டர் சயின்ஸ், தகவல் தொழில்நுட்பம், இ.சி., இ.இ.இ., சிவில் போன்ற படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இவற்றை தேர்வு செய்வதில் மாணவர்கள் முன்னுரிமை அளிக்கலாம். தரமான கல்லுாரிகளை தேர்வு செய்வதிலும் கவனம் வேண்டும்.
எந்த பிரிவு படித்தாலும் 99 சதவீதம் பேர் ஐ.டி., துறையில் தான் வேலைக்கு செல்கின்றனர்.படிக்கும் போதே திறமை மட்டுமின்றி புத்திசாலித் தனத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஜப்பான், ஆங்கிலம் உட்பட சில வெளிநாட்டு மொழிகளை கூடுதலாக கற்றுக்கொள்ள வேண்டும். கல்லுாரிகளில் வளாக நேர்காணல் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் மாறி, அவர்களுக்குள் போட்டி ஏற்படும் சூழல் அமையும். அதற்காக மாணவர்கள் தயாராக வேண்டும். மரைன் இன்ஜி., படிப்புகளுக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது.ரோபோட்டிக் புராசஸ் ஆபரேஷன் பிரிவில் 2 லட்சம் பொறியாளர்கள் தேவை இருப்பின், நம்மிடம் 5 ஆயிரம் பேர் கூட அதற்கான தகுதியுடன் இல்லை.மருத்துவத்தை பொறுத்துவரை நீட் தேர்வுக்கு திட்டமிட்டு தயாராகலாம். குறிப்பாக தாவரவியல், விலங்கியல் பாடங்களில் நுாறு சதவீதம் கவனம் செலுத்தினால் 360 மதிப்பெண்கள் பெறும் வாய்ப்பு கிடைக்கும். இதுதவிரகால்நடை மருத்துவம், ஓமியோபதி, சித்தா படிப்புகளுக்கும் எதிர்காலம் உள்ளது. பாரா மெடிக்கல் படித்தால் மேல்படிப்பு கட்டாயம் படிக்க வேண்டும். கலைப் பிரிவுகளில் பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் ஆங்கிலத்தை தேர்வு செய்யலாம். நியூட்ரிஷியன், டயட்டீஷியன், அனிமேஷன், ஆப்டிக்கல்ஸ் துறைகளுக்கும் எதிர்காலம் உள்ளது.எந்த படிப்பு படித்தாலும் புரிந்து படிப்பதுடன் கணினி அறிவியல் அறிவு, ஆங்கில புலமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். திறமை மட்டும் இருந்தால் போதாது, அத்துடன் தொழில்நுட்ப அறிவும் வேண்டும். இவ்வாறு பேசினார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews