தேர்தல் பயிற்சியில் ஆசிரியரை தாக்கிய விஏஓ.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 31, 2019

தேர்தல் பயிற்சியில் ஆசிரியரை தாக்கிய விஏஓ..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சிவகங்கையில், தேர்தல் அலுவலர்கள் பயிற்சி வகுப்பு கூட்டத்தில் ஆசிரியர் மற்றும் வி.ஏ.ஓ.,இடையே மோதல் ஏற்பட்டு இரு தரப்பிலும் சட்டை கிழிக்கப்பட்டது. சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சி அளித்த சில மண்டல அலுவலர்கள், வருகை பதிவேட்டில் இரு முறை கையெழுத்து பெற்றுள்ளனர். 31வது மண்டல அலுவலர் துணை தாசில்தார் முத்துக்குமார் ஒரு முறை மட்டுமே கையெழுத்து பெற்றுள்ளார். இதுகுறித்து காளையார்கோவில், பெரிய ஓலைக்குடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் தாம் ரபேல் செபஸ்டியன், முத்துக்குமாரிடம் கேட்டுள்ளார். தன் அதிகாரிக்கு ஆதரவாக தமறாக்கி தெற்கு, வி.ஏ.ஓ., ராஜசேகர் பேசியுள்ளார். இருதரப்பினிடையே மோதல் ஏற்பட்டது.துணை தாசில்தார் என்றும் பாராமல், முத்துக்குமார் கையில் இருந்த வருகை பதிவேட்டை செபஸ்டியன் கிழித்தெறிந்தார்.
இதை தொடர்ந்து, ஆசிரியர் செபஸ்டியன் - வி.ஏ.ஓ., ராஜசேகர் தாக்கி கொண்டனர். இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறினர். இருவரது சட்டைகளும் கிழிந்த நிலையில், பணிகளை புறக்கணித்து கல்லுாரி வளாகத்திற்குள் தர்ணாவில் ஈடுபட்டனர்.சமரசம் சிவகங்கை, டி.எஸ்.பி., முகமது கபூர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு வந்த கலெக்டர் ஜெயகாந்தன், இருதரப்பினரிடமும் புகாரை பெற்றார். தகராறு நடந்த நேரத்தில் இருக்கும், 'சிசிடிவி கேமரா' பதிவை பார்வையிட்டு தவறு செய்தோர் மீது, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இரு தரப்பினரும் போராட்டத்தை கைவிட்டு, பயிற்சி வகுப்பிற்கு சென்றனர்.
சிவகங்கை அரசுக் கல்லூரியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. சிவகங்கை அரசுக் கல்லூரியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. பயிற்சிக்கு வந்த ஆசிரியர் டாம் ரபேல் செபாஸ்டியன் என்பவருக்கும் விஏஓ ராஜசேகர் என்பவருக்கும் திடீரென ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக உருவானது.
அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில் இருவரின் சட்டையும் கிழிந்தது. இந்நிலையில், விஏஓவை கண்டித்து பயிற்சிக்கு வந்த ஆசிரியர்களும், ஆசிரியர்களுக்கு எதிராக விஏஓக்களும் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், ஆட்சியர் ஜெயகாந்தன் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் சமாதானம் அடைந்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews