போதிய பள்ளிகள் இல்லாததால் அதிகரித்த குழந்தை திருமணங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 10, 2019

போதிய பள்ளிகள் இல்லாததால் அதிகரித்த குழந்தை திருமணங்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகத்தில், போதிய பள்ளிகள் இல்லாததால், குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடக்கின்றன,&'&' என, மாநில சமகல்வி இயக்கக, மாநில பொதுச்செயலர், செல்லசெல்வகுமார் பேசினார். தமிழக சமகல்வி இயக்ககம் சார்பாக, குழந்தை திருமணங்கள் குறித்து, மாநில ஆய்வு அறிக்கை வெளியீடு, மாவட்ட அளவில் பிரசாரம், தர்மபுரியில், நேற்று நடந்தது.மாநில பொதுச்செயலர் செல்ல செல்வகுமார் ஆய்வறிக்கை வெளியிட்டு பேசியதாவது: தமிழக அளவில், குழந்தை திருமணங்கள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டதில், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலுார் உட்பட, 10 மாவட்டங்கள் முதலிடத்தில் உள்ளன.
இங்கு, பள்ளிக்கு செல்லும் வழியில், 67.2 சதவீதம் பேர் பாலியல் தொல்லைக்கு உள்ளானது, தெரிய வந்துள்ளது. இந்த மாவட்டங்களில், போதிய பள்ளி வசதி, வேலை வாய்ப்பு, பாதுகாப்பின்மை, வறுமை போன்ற காரணங்களால், குழந்தை திருமணத்தை, பெற்றோர் செய்து வைத்தது, தெரியவந்துள்ளது. இதைத்தடுக்க, கிராம பகுதிகளில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தபடி, அரசு பள்ளி களை துவங்க வேண்டும். மாணவர்கள், பாதுகாப்பாக பள்ளிக்கு வந்து செல்வதை, ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். புதிய வேலைவாய்ப்பை உருவாக்கி, வறுமையை போக்கினால், குழந்தை திருமணங்களை. 100 சதவீதம் தடுக்க முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews