👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழில் சட்டம் படித்தவர்கள், சிவில் நீதிபதிகள் பதவியில் ஒதுக்கீடு கோரிய வழக்கை, இரண்டு நீதிபதிகளுக்கும் மேலான அமர்வின் விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

சிவில் நீதிபதிகள் பதவிக்கு, விண்ணப்பங்களை வரவேற்று, அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு, பூமிநாதன் என்பவர் உள்ளிட்ட மூவர் விண்ணப்பித்தனர்.
இவர்கள், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் விபரம்:சட்டப்படிப்பை, நாங்கள் தமிழில் படித்தோம்; தேர்வையும், தமிழில் தான் எழுதினோம். தமிழ் வழியில் சட்டக் கல்வி பயின்றதாக, விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20சதவீத ஒதுக்கீடு வழங்க அரசாணை உள்ளது.தமிழ் வழியில் படித்த எங்களுக்கு இடஒதுக்கீடு கோரியதை, தேர்வாணையம் நிராகரித்தது. அதை ரத்து செய்து, எங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுக்களில் கூறியிருந்தனர்.மனுக்கள், நீதிபதிகள், வி.பாரதிதாசன், வி.பார்த்திபன் அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்தன.
வழக்கை, இரண்டு நீதிபதிகளுக்கும் மேலான அமர்வு விசாரிக்க, தலைமை நீதிபதிக்கு, டிவிஷன் பெஞ்ச் பரிந்துரைத்தது.நீதிபதிகள் உத்தரவில் கூறியதாவது: தமிழில் சட்டம் பயின்று, தேர்வு எழுதியவர்கள், தமிழ் வழி கல்வி பயின்ற பிரிவின் கீழ் வருவரா; அவர்கள், தமிழ் வழி கல்விக் கான இடஒதுக்கீடு கோர தகுதி உள்ளதா; சட்டக் கல்லுாரிகளில், தமிழ் வழியில் பயிற்று விக்கும் முறை உள்ளதா?அப்படி இருந்தால், தமிழ் வழி கல்வி எப்போது துவங்கப்பட்டது; எந்தெந்த சட்டக் கல்லுாரிகளில், தமிழ் வழியில் சட்டப் படிப்பை நடத்துகிறது போன்ற கேள்விகளுக்கு விடை காணப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்