Breaking

Friday, October 05, 2018

அண்ணா பல்கலை. தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடக்கம்


பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) அங்கீகாரம் கிடைத்ததைத் தொடர்ந்து, எம்.பி.ஏ. உள்ளிட்ட தொலைநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவன இயக்குநர் எஸ்.என்.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாடு முழுவதும் தொலைநிலைக் கல்வி முறைகளை வரைமுறைப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை யுஜிசி அண்மையில் கொண்டு வந்தது. நாக் (தேசிய மதிப்பீடு மற்றும் தரச் சான்று) மதிப்பெண் 3.46 புள்ளிகள் பெற்றுள்ள அண்ணா பல்கலைக்கழகம், யுஜிசி-யின் புதிய கட்டுப்பாடுகளில் இடம்பெற்றுள்ள அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து அங்கீகாரம் பெற முழுத் தகுதியையும் பெற்றது. இதன் மூலம், பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய மூன்று தொலைநிலை படிப்புகளுக்கும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு யுஜிசி அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதையடுத்து புதன்கிழமை முதல், இந்த மூன்று படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here

Total Pageviews

Search This Blog