உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 14 ( October 14 ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 14, 2018

உலக வரலாற்றில் இன்று: அக்டோபர் 14 ( October 14 )




அக்டோபர் 14 ( October 14 )
கிரிகோரியன் ஆண்டின் 287 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 288 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 78 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1066 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல் :
ஏஸ்டிங்சு சண்டை : இங்கிலாந்தில்
முதலாம் வில்லியமின்
நோர்மானியப் படையினர்
ஆங்கிலேய இராணுவத்தைத் தோற்கடித்து, இரண்டாம் அரோல்டு மன்னரைக் கொன்றனர்.
1322 – இசுக்காட்லாந்தின்
இராபர்ட்டு புரூசு பைலாண்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் இரண்டாம் எட்சர்டு மன்னரைத் தோற்கடித்ததை அடுத்து, இசுக்காட்லாந்தின் விடுதலையை எட்வர்ட் ஏற்றுக் கொண்டார்

1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து
இத்தாலி, போலந்து ,
போர்த்துக்கல், எசுப்பானியா ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1586 – இசுக்காட்லாந்தின் முதலாம் மேரி இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்துக்கு எதிராக சதி மேற்கொண்டதாகக் குற்றஞ் சாட்டப்பட்டு விசாரணைக்குட்படுத்தபட்டாள்.
1758 – ஏழாண்டுப் போர்: ஆஸ்திரியா புருசியாவை ஆக்கிக்ர்க் என்ற இடத்தில் நடந்த போரில் வெற்றி கொண்டது.
1773 – உலகின் முதலாவது கல்வி அமைச்சு போலந்து-லித்துவேனியா பொதுநலவாயத்தில் அமைக்கப்பட்டது.
1773 – அமெரிக்கப் புரட்சிப் போர் தொடங்குவதற்கு சில காலத்திற்கு முன்னர்,
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் தேயிலைக் கப்பல்கள் பல அனாபொலிசு துறைமுகத்தில் எரிக்கப்பட்டன.
1808 – ரகுசா குடியரசு
பிரான்சுடன் இணைக்கப்பட்டது.
1898 – ஐக்கிய இராச்சியத்தில்
கோர்ன்வால் அருகே மொகெகன் என்ற நீராவிக் கப்பல் கவிழ்ந்ததில் 106 பேர் உயிரிழந்தனர்.
1903 – யாழ்ப்பாணத்தின் ஜாஃப்னா என்ற பயணிகள் கப்பல்
நெடுந்தீவுக்கு பயணம் மேற்கொண்டது.
1912 – அமெரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட் மில்வாக்கியில் பரப்புரை நடத்திய போது, மன நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனால் சுடப்பட்டார்.
1913 – ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 439 பேர் உயிரிழந்தனர்,

1915 – முதலாம் உலகப் போர்:
பல்காரியா மைய நாடுகளுடன் இணைந்து போரில் குதித்தது.
1933 – நாட்சி ஜெர்மனி உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது.
1939 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியக் கடற்படையினரின்
ரோயல் ஓக் என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. 800 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: இலண்டன் பிளிட்சு குண்டுவீச்சுகளின் போது பாலம் தொடருந்து நிலையத்தில் 66 பேர் கொல்லப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தின் ஏதென்சு நகரம் பிரித்தானிய இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது. வேர்மாக்ட் படைகள் வெளியேறின.
1944 – இரண்டாம் உலகப் போர்:
சூலை 20 இல் இடம்பெற்ற இட்லரின் படுகொலை முயற்சி தொடர்பாக இராணுவ அதிகாரி இர்வின் ரோமெல் கட்டாயமாகத் தற்கொலை செய்யத் தூண்டப்பட்டு இறந்தார்.
1948 – இலங்கையின் முதலாவது
நாடாளுமன்றம் கூடியது.
1949 – அமெரிக்கக் கூட்டரசைக் கவிழ்க்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்கக் கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த 11 தலைவர்கள் மீது ஒன்பது மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கை அடுத்து அவர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
1949 – சீன உள்நாட்டுப் போர் : சீனக் கம்யூனிசப் படைகள் குவாங்சௌ நகரைக் கைப்பற்றின.
1956 – இந்தியத் தலித் தலைவர்
அம்பேத்கர் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.
1957 – எசுப்பானியாவின்
வாலேன்சியா நகரில் இடம்பெற்ற பெரும் வெள்ளப்பெருக்கில் 81 பேர் உயிரிழந்தனர்.
1962 – கியூபா ஏவுகணை நெருக்கடி தொடங்கியது:
கியூபாவுக்கு மேல் பறந்த அமெரிக்க U-2 விமானம் சோவியத் அணு ஆயுதங்களைப் படம் பிடித்தது.
1964 – மார்ட்டின் லூதர் கிங்
அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1964 – லியொனீது பிரெசுனேவ்
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், அலெக்சி கொசிஜின் சோவியத் தலைவராகவும் நியமிக்கப்பட்டனர்.
நிக்கித்தா குருசேவ் தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார்.
1968 – மேற்கு ஆஸ்திரேலியாவில் 6.5 M w நிலநடுக்கம் ஏற்பட்டதில் 20–28 பேர் உயிரிழந்தனர்.
1968 – விண்ணிலிருந்தான முதலாவது நேரடி
தொலைக்காட்சி அஞ்சல்
அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்கள்
புவியைச் சுற்றுவது ஒளிபரப்பபட்டது.
1973 – தாய்லாந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மக்களாட்சிக்காகப்
போராட்டத்தில் ஈடுபட்டதில் 77 பேர் கொல்லப்பட்டு 857 பேர் காயமடைந்தனர்.
1983 – கிரெனடாவில் இடம்பெற்ற
இராணுவப் புரட்சியில் பிரதமர் மோரிசு பிசொப் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.
1987 – டெக்சாசில் ஜெசிக்கா என்ற 18-மாதக் குழந்தை கிணறு ஒன்றில் வீழ்ந்தது. 58 மணி நேரத்தின் பின்னர் இது உயிருடன் மீட்கப்பட்டது. இந்த மீட்புப் போராட்டம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது

1991 – பர்மாவின் எதிர்க் கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
1994 – பாலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத், இசுரேல் பிரதமர் இட்சாக் ரபீன், வெளியுறவுத் துறை அமைச்சர் சிமோன் பெரெஸ் ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
2014 – நேபாளத்தைத் தாக்கிய ஊத் ஊத் புயலினால் பனிப்புயல் ஏற்பட்டதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
2017 – சோமாலியாவில் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பில் 358 பேர் கொல்லப்பட்டனர், 400 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
1606 – யோவான் மத்சாக்கர் , டச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகளின் ஆளுனர் (இ. 1678 )
1633 – இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு (இ. 1701 )
1643 – முதலாம் பகதூர் சா , முகலாயப் பேரரசர் (இ. 1712 )
1873 – ஜூல்ஸ் ரிமெட் , பிரான்சியத் தொழிலதிபர் (இ. 1954)
1887 – ஆற்காடு இராமசாமி முதலியார் , இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி பி. 1976 )
1887 – ஏ. இலட்சுமணசுவாமி , இந்திய மருத்துவர், கல்வியாளர் (இ.
1974 )
1890 – டுவைட் டி. ஐசனாவர் , அமெரிக்காவின் 34வது
அரசுத்தலைவர் (இ. 1969 )
1893 – லில்லியன் கிஸ் , அமெரிக்க முதல் நடிகை (இ. 1993 )
1900 – வி எட்வர்ட் டெமிங் , அமெரிக்கப் புள்ளிவிபரவியலாளர், எழுத்தாளர் (இ. 1993

1926 – எர்பர்ட் தம்பையா , இலங்கை நீதிபதி, வழக்கறிஞர் (இ. 1992 )
1927 – ரோஜர் மூர் , ஆங்கிலேய நடிகர், தயாரிப்பாளர் (இ. 2017)
1930 – மொபுட்டு செசெ செக்கோ , சயீர் அரசுத்தலைவர் (இ. 1997 )
1942 – சிவசங்கரி , தமிழக எழுத்தாளர்
1943 – மனோன்மணி சண்முகதாஸ் , ஈழத்தின் கல்வியாளர், தமிழறிஞர்
1946 – கிரைக் வெண்டர், அமெரிக்க உயிரியலாளர்
1957 – பிரான்சு உருசா , அங்கேரிய இந்தியவியலாளர், மெய்யியலாளர்
1965 – ஸ்டீவ் கூகன், ஆங்கிலேய நடிகர், தயாரிப்பாளர்
1976 – திலகரத்ன டில்சான், இலங்கைத் துடுப்பாளர்
1981 – கவுதம் கம்பீர், இந்தியத் துடுப்பாளர்
இறப்புகள்
1803 – அய்மே ஆர்கண்ட் , சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (பி. 1750 )
1827 – பிரடெரிக் நோர்த் , பிரித்தானிய இலங்கையின் முதலாவது ஆளுநர் (பி. 1766 )
1831 – ழீன் உலூயிசு பொன்சு , பிரான்சிய வானியலாளர் (பி. 1761 )
1944 – இர்வின் ரோமெல் , செருமானிய இராணுவத் தலைவர் (பி. 1891 )
1961 – இலங்கையர்கோன் , ஈழத்துச் சிறுகதை முன்னோடி (பி. 1915 )
1977 – பிங்கு கிராசுபி , அமெரிக்கப் பாடகர், நடிகர் (பி. 1903 )
1981 – கே. பி. ஹரன், தமிழக-இலங்கைப் பத்திரிகையாளர், பேச்சாளர் (பி. 1906 )
1984 – மார்ட்டின் இரைல் , ஆங்கிலேய வானியலாளர் (பி. 1918 )
1995 – சில்லையூர் செல்வராசன், ஈழத்து எழுத்தாளர், கவிஞர், நாடக, திரைப்பட நடிகர் (பி. 1933 )
2005 – சுந்தர ராமசாமி , தமிழ் எழுத்தாளர் (பி. 1931 )
2009 – சி. பி. முத்தம்மா , இந்தியப் பெண் சாதனையாளர் (பி. 1924 )

2011 – கம்பளைதாசன், தமிழக-இலங்கை நாடகக் கலைஞர்
2013 – மோகன் தாரியா , இந்திய அரசியல்வாதி, சமூகச் செயற்பாட்டாளர், வழக்கறிஞர் (பி.
1925 )
2014 – காவலூர் ராஜதுரை , ஈழத்து எழுத்தாளர் (பி. 1931 )
சிறப்பு நாள் அன்னையர் நாள் ( பெலருஸ் )
உலகத் தர நிர்ணய நாள்
ஆசிரியர் நாள் ( போலந்து)


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews