திருப்பூர் மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கான பஸ் பாஸ் விண்ணப்பங்கள், மாவட்ட போக்குவரத்துக்கழகத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையால், தலைமையாசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஒவ்வொரு கல்வியாண்டிலும், அந்தந்த பகுதிக்குட்பட்ட கிளை போக்குவரத்துக்கழகத்தில், ஆசிரியர்கள் விண்ணப்பங்களை அளித்து, பாஸ்களையும் அங்கேயே பெற்றுக்கொள்கின்றனர். ஆனால், நடப்பாண்டில் இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், கிளை போக்குவரத்துக்கழகங்களில் விண்ணப்பங்களை பெற மறுக்கின்றனர். நேரடியாக, மாவட்ட போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பித்து, பாஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என, ஆசிரியர்களை திருப்பி அனுப்புகின்றனர்.இந்த மாற்றம் குறித்து எந்த அறிவிப்பும் வழங்காததால், பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து, கிளை போக்குவரத்து கழகங்களுக்கு சென்று திரும்புகின்றனர்.இதற்கு விண்ணப்பிக்க திருப்பூர் சென்றாலும், குறிப்பிட்ட எண்ணிக்கை வரை மட்டுமே விண்ணப்பங்களை ஏற்பதால், மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
இதனால், மாணவர்களின் வகுப்புகள் பாதிக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்ட போக்குவரத்து கழக அலுவலர் ஒருவர் கூறுகையில், '' கிளை போக்குவரத்துக்கழகங்களில் தொழில்நுட்ப குறைபாடுகள் ஏற்படுவதால், ஒரே இடத்தில் மட்டுமே விண்ணப்பித்து, பாஸ் பெற்றுக்கொள்ளும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. நடப்பாண்டு முதல், இந்த நடைமுறையின்படி, விண்ணப்பங்கள் பெறப்படும். பல்வேறு கிளை அலுவலகங்களிலிருந்து, விண்ணப்பங்கள் பெறும்போது, அவற்றில் சில விபரங்களில் தவறுகள் ஏற்பட்டு விடுகிறது.
இதனால், அந்தந்த பள்ளிகளே நேரடியாக மாவட்ட போக்குவரத்து கழகத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது,'' என்றார்.ஓரிரு பஸ் பாஸ் இருந்தாலும், இதை திருப்பூர் எடுத்துச் சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற இந்த நடைமுறையால், ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். இரண்டு ஆசிரியர் உள்ள பள்ளிகளில், ஒரு ஆசிரியர் இப்பணிக்கு செல்வதால் அன்றைய வகுப்பு நடத்தப்படுவதில்லை. இதற்கு, அந்தந்த கிளை போக்குவரத்து கழகங்களில், தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்து, மீண்டும் பழைய நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.