Breaking

Saturday, June 30, 2018

வகுப்பறையில் புதிய அணுகுமுறைகளை செயல்படுத்த ஆர்வமாக உள்ள ஆசிரியர்களுக்கு!!


வகுப்பறைகளில் புதிய அணுகுமுறைகளை செயல்படுத்த ஆர்வமாக இருந்தால் உங்கள் செயல்திட்ட சுருக்கத்தினை ஜீலை 30 ஆம் தேதிக்குள் RIE மைசூருக்கு அனுப்ப வேண்டும். அங்கு தெரிவு செய்யப்பட்ட செயல்திட்டங்களை டெல்லியில் இருக்கும் NCERT க்கு அனுப்பி வைப்பார்கள்.

NCERT ல் பகுப்பாய்வு செய்து  சிறந்த செயல்திட்டத்தை ந்மது வகுப்பறையில் செயல்படுத்துவதற்கு அனுமதி தருவார்கள். அனுமதி கடிதம் கிடைத்த பின் ஒரு மாதம் முதல் சுமார் ஆறு மாதங்களுக்குள் உங்கள் செயல்திட்டத்தை செயல்படுத்தி அதன் அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும்.

அதன்பின் ஒருமுறை டெல்லி சென்று உங்கள் செயல்திட்டத்தை வழங்க வேண்டும். சிறந்த பத்து செயல் திட்டத்திற்கு தேசிய விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படும். ஆர்வம் இருக்கும் ஆசிரியர்கள் உங்கள் வகுப்பறையில் செயல்படுத்தும் புதிய அணுகுமுறைகளை தேசிய அளவில் பகிர்ந்து பரிசினை பெற்றுக்கொள்ளுங்கள்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள link ல் அதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog