Breaking

Wednesday, August 19, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் 20.08.2026 | School Morning Assembly Activities in Tamil

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.08.2026

தேதி: 20 ஆகஸ்ட் 2026
நாள்: வியாழக்கிழமை
தொகுப்பு: பள்ளி காலை வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் பாடசாலைத் தகவல்கள்


1. திருக்குறள் (Thirukkural)

பால்: பொருட்பால்
இயல்: அரசியல்
அதிகாரம்: 48. வலியறிதல்
குறள் எண்: 477

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

பொருள்: எதைப் பிறர்க்குக் கொடுத்தாலும் தம் பொருளாதார நிலையை அறிந்து கொடுக்கவும்; அப்படிக் கொடுப்பதே பொருளைக் காத்துக் கொண்டு, கொடுக்கும் முறையான வழியாகும்.

2. பழமொழி (Proverb)

English Proverb: Many strokes fell mighty oaks.
தமிழ் பழமொழி: சிறு உளி மலையைப் பிளக்கும்.

3. இரண்டொழுக்க பண்புகள் (Moral Values)

  • பெரியோருக்கு பணிவதும், பிறருக்கு உதவுவதும் இளைஞருக்கு அழகு என்பதை நான் அறிவேன்.
  • கல்வி ஒன்றே என்னை உயர்த்தும். எனவே நன்கு படிப்பேன்.

4. பொன்மொழி & Thought for the Day

பொன்மொழி: “திறமை பிறப்பால் கிடைப்பதில்லை; பயிற்சியால் செதுக்கப்படுகிறது.”

Thought for the Day: “Dream big, learn skills, work hard, and create your own opportunities.”

5. பொது அறிவு (General Knowledge)

  1. தமிழக அரசின் 2026 -ஆம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" யாருக்கு வழங்கப்பட்டது?
    விடை: திரு. எம். கிருஷ்ணசாமி.
  2. "தகைசால் தமிழர் விருது" யாருக்கு வழங்கப்படும்?
    விடை: தமிழ் சமுதாய மேம்பாட்டிற்கும், தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கும் தொண்டாற்றியவர்களுக்கு வழங்கப்படும்.

6. ஆங்கிலச் சொற்கள் மற்றும் பொருள் (English Words)

  • Tenacious – Never giving up easily (விடாமுயற்சியுள்ள).
  • Genuine – Truly sincere and real (உண்மையான).

7. புவியியலும் சுற்றுசூழலும் (Geography & Environment)

கிராம சுயராஜ்யம்: கிராம சுயராஜ்யம் என்பது காந்தியடிகளின் முக்கியக் கருத்தாகும். ஒவ்வொரு கிராமமும் தனக்குத் தேவையான உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளைத் தானே தயாரித்துத் தற்சார்புடனும் சுதந்திரத்துடனும் இருக்க வேண்டும்.
கைத்தொழில்கள்: பெரிய இயந்திரத் தொழிற்சாலைகளுக்கு மாற்றாக ராட்டை நூற்பது மற்றும் குடிசைத் தொழில்களை வளர்க்க வேண்டும்.

8. NMMS வினா-விடை (SAT - Social)

சரியான இணையைத் தேர்வு செய்க:
(1) மன்சப்தாரி முறை - அக்பர்
(2) ஜப்தி முறை - ஔரங்கசீப்
(3) துசுக் - இ - பாபரி - கட்டிடக் கலை
(4) இரண்டாம் பானிபட் போர் - 1526

விடை: (1) மன்சப்தாரி முறை - அக்பர்

9. இன்றைய சிறப்பு நாள் - இராஜீவ் காந்தி பிறந்தநாள் (ஆகஸ்ட் 20)

இராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகத்து 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார்.
1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 21 மே 1991 அன்று திருப்பெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் இராசீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

10. நீதிக்கதை: முயற்சி திருவினையாக்கும்

ஒரு சிறிய ஊரில் பாலன் என்பவர் தனது குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சிறிய மரச்சாமான் தொழில் செய்து வந்தார். ஆரம்பத்தில் அவருடைய பொருட்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் குறைவாக இருந்தனர். வருமானமும் குறைவாக இருந்ததால் குடும்பத்தை நடத்துவது சிரமமாக இருந்தது.

ஒருநாள் பாலன், “இந்தத் தொழிலால் நமக்கு என்ன பயன்? இதை விட்டுவிடலாம்” என்று நினைத்தார். அப்போது அவரது மனைவி, “நாம் முயற்சி செய்வதை நிறுத்திவிட்டால் எப்படி முன்னேற முடியும்? புதிய முறையில் முயற்சி செய்து பாருங்கள்” என்று ஊக்கப்படுத்தினார்.

அதன்பிறகு பாலன் தினமும் புதிய வடிவமைப்புகளைக் கற்றுக்கொண்டார். தரமான மரங்களைத் தேர்ந்தெடுத்து, அழகான மேசைகள், நாற்காலிகள், சிறிய அலமாரிகள் போன்றவற்றை உருவாக்கினார். ஆரம்பத்தில் பலமுறை தவறுகள் ஏற்பட்டன. சில பொருட்கள் விற்காமல் போயின. ஆனாலும் அவர் மனம் தளரவில்லை.

சில மாதங்களுக்குப் பிறகு, அவரது பொருட்களின் தரம் மற்றும் அழகு பற்றி ஊர் முழுவதும் பேசத் தொடங்கினர். வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். சிறிய தொழில், பெரிய கடையாக வளர்ந்தது.

பாலன் தனது குடும்பத்தினரிடம், “நாம் வெற்றி பெற்றதற்கு காரணம் ஒரே நாளில் கிடைத்த அதிர்ஷ்டம் அல்ல; தோல்விகளுக்குப் பிறகும் தொடர்ந்து செய்த முயற்சிதான்” என்றார்.

நீதி: முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து உழைத்தால், சாதாரண முயற்சியும் பெரிய வெற்றியாக மாறும். அதுவே “முயற்சி திருவினையாக்கும்.”

11. இன்றைய முக்கியச் செய்திகள் (20.08.2026)

தமிழ் செய்திகள்

  • பால் கொள்முதல் விலை உயர்வு அறிவிப்பினைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
  • கும்மிடிப்பூண்டி முதல் கூடூர் வரை புதிய ரயில்வே வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ராக்கெட் பூஸ்டரை செங்குத்தாக தரையிறக்கி சீனாவின் தனியார் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

விளையாட்டுச் செய்திகள்:
• கிராண்ட் செஸ் போட்டிகள், இறுதிப்போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றார்.
• உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.

Today's Headlines (English)

  • Following the announcement of an increase in the milk procurement price, the Milk Agents and Workers Welfare Association thanked the Tamil Nadu Chief Minister.
  • The Union Cabinet has approved new railway lines from Gummidipoondi to Gudur.
  • A private Chinese company has achieved a major feat by landing a rocket booster vertically.

Sports News:
• Grand Chess Tournament: Praggnanandhaa has qualified for the final.
• World Badminton Championship: Indian player Unnati Hooda won her match.


நாளை காலை வழிபாட்டுச் செய்திகளுக்குத் தொடர்ந்து இணைந்து இருங்கள்!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog