கணக்கில் வராத வருவாய்களை கணக்கில் எடுத்து வந்தால் வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வரிவிக்கு தனிநபரின் மொத்த வருவாயில் இருந்து அளிக்கப்படும். இது வருமான வரி சட்டம், 1961 இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி தனிநபரின் முதலீடு அல்லது செலவினங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
உதாரணமாக, ஒரு தனிநபர் பொது வருங்கால வைப்பு நிதி போன்றவற்றில் செய்துள்ள முதலீடுகளுக்கும் 80C பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படும். மேலும் குழந்தைகளின் கல்வி கட்டணம் மற்றும் ஒரு வீட்டு பதிவிற்கு செலுத்தப்பட்ட முத்திரைத் தாள் போன்ற செலவுகளும் 80C க்கு கீழ் வரிவிலக்குக்கு தகுதி பெறுகின்றன.
பிரிவுகள் 80D, 80E, 80U மற்றும் 80G உள்ளிட்ட அனைத்துப் பிரிவிலும் வருமான வரி உச்ச வரம்பு மற்றும் சலுகை காரணிகள் வேறுபடுகின்றன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.