முதுநிலை மருத்துவப் படிப்புகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை (மே 26) நடைபெற உள்ளது.
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு மே 19-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அரசு இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றுக்கான முதல் கட்ட கலந்தாய்வு மே 24-ஆம் தேதி நிறைவடைந்தது .kaninikkalvi.blogspot.in
இதனையடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டு, சனிக்கிழமை (மே 26) நடைபெற உள்ளது என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.