Breaking

Tuesday, November 05, 2024

வருகின்ற நவம்பர் 8ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்கள்

வருகின்ற நவம்பர் 8ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்கள்... புது புது திட்டங்கள் அறிமுகப்படுத்த முதல்வர் களம் இறங்க உள்ளார். பள்ளிகள் இணைப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு அன்று வெளியாக உள்ளது. ஒரு கிலோ மீட்டருக்குள் இரண்டு மூன்று பள்ளிகள் இருந்தால்... பள்ளி இணைப்பு கட்டாயம் நடைபெறும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் கூறியது... பள்ளிகள் இணைப்பால் பல கோடி ரூபாய் சம்பள இழப்பு தவிர்க்கப்படும் என முதல்வருக்கு அறிக்கை அளித்துள்ளார். பள்ளி இணைப்பிற்கு தீவிரமும் காட்டி வருகிறார். எனவே இனிவரும் காலம் ஆசிரியர் சமுதாயம் சற்று கடினமான பாதையில் நடக்க வேண்டி இருக்கும் கவனம் *தேவை


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை ஆய்வுக்கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் வருகின்ற 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனையொட்டி மாண்புமிகு அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் துறையின் இயக்குநர்களுடன் இன்று கலந்தாலோசனையில் ஈடுபட்டு, ஆலோசனைகளை வழங்கினார்.அப்போது பள்ளிக் கல்வித்துறை செயலாளர் திருமிகு. மதுமதி இ.ஆ.ப, பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநர் திரு. சங்கர் இ.ஆ.ப உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog