பதவிஉயர்வு கலந்தாய்வு அறிவிப்பில் இல்லே - ஆசிரியர்கள் அதிருப்தி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 01, 2023

2 Comments

பதவிஉயர்வு கலந்தாய்வு அறிவிப்பில் இல்லே - ஆசிரியர்கள் அதிருப்தி

IMG_20230501_161200
IMG_20230501_150659
பதவிஉயர்வு கலந்தாய்வு அறிவிப்பில் இல்லே - ஆசிரியர்கள் அதிருப்தி

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு எப் போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் நிலவியது.

அதற்கு ஏற்றவாறு, ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மே 8ம் தேதி முதல் தொடங்கும் என் றும், இதற்கு ஆசிரியர்கள் எமிஸ் இணையதளம் மூல மாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண் டும் என்றும் பள்ளிக்கல் வித்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஆனால், இந்த அறி விப்பில் உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு மாறுதலுக்கான கலந் தாய்வு மட்டுமே இடம் பெற்று, பதவி உயர்வு கலந்தாய்வு குறித்து எந்த அறிவிப்பும் இல்லாமல் போனது ஆசிரியர்கள் மத் தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ஆண்டு தோறும் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடப்பது வழக்கம். இதில், பதவி உயர்வு அளித்து விட்டு, அதனால் ஏற்படும் காலிப்பணியிடங்களையும் சேர்த்து பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.

2 comments:

  1. blank

    பதவி உயர்வுக்கு TET தேவை தொடர்பான வழக்கின் தீர்ப்புக்காக இவ்வாறு பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தப்பட்டு இருக்கலாம்.
    TET தகுதி இல்லை என்ற காரணத்துக்காக பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு நிறுத்தப்பட்டிருக்கும் எனில், தொடக்கக்கல்வி துறையில்; TET தகுதி இல்லாத நிலையில்...BEO பதவி உயர்வு, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெறுவதற்கு அனுமதிப்பதும் சரியல்லவே.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84731117