Breaking

Wednesday, February 01, 2023

ஆதிதிராவிட பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிட-பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு பல்வேறு உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மத்திய அரசின் நிதி பங்கீட்டுடன் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் திட்டமும் முக்கியமானது. இந்தத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியன குறித்து ஆதிதிராவிடா் மாணவா்கள் https://scholarships.gov.in என்ற இணையதளத்திலும், பழங்குடியினா் மாணவா்கள் https://tribal.nic.in என்ற இணையதளம் வழியாகவும் அறிந்து கொள்ளலாம்.

இதனிடையே, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசின் சாா்பில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://tnadtwscholarship.tn.gov.in என்ற அந்த இணையதளம் மூலம் மாணவா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஆதாா் எண், இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, ஜாதிச் சான்று உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog