அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை.! ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 31, 2022

Comments:0

அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை.! ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்தது. அதற்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த குமரி, பலவகையிலும் இன்னல்களுக்கு ஆளாகி வந்தது. தியாகம், உயிரிழப்பு, மாபெரும் போராட்டங்கள் என ஏராளமான வரலாறுகளும் அதன்பின்னால் இருக்கிறது. நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின்னர், தாய் தமிழகத்தோடு குமரி இணைந்து 66 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளது.

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாளில் இருந்து குமரி மாவட்டம் இணைக்கப்பட்ட நாள் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைக்கப்பட்ட நாள் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி நாளை மாவட்டம் முழுவதும் விடுமுறை தினமாக கொண்டாடப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews