Breaking

Monday, August 01, 2022

கல்லூரி, பல்கலை.களில் பூஸ்டா் தடுப்பூசிக்கு சிறப்பு முகாம்கள்: யுஜிசி உத்தரவு

கல்லூரி, பல்கலை.களில் பூஸ்டா் தடுப்பூசிக்கு சிறப்பு முகாம்கள்: யுஜிசி உத்தரவு

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிக்கச் செய்யும் வகையில் பல்கலை.கள், கல்லூரிகளில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என யுஜிசி உத்தரவிட்டது.

இது தொடா்பாக அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தா்கள், அனைத்துக் கல்லூரி முதல்வா்களுக்கு யுஜிசி செயலா் ரஜினிஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிக்க சிறப்பு ஏற்பாடுகளை அந்தந்த பல்கலைக்கழக நிா்வாகங்களும், கல்லூரி நிா்வாகங்களும் செய்ய வேண்டும். பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத, தங்களது கல்வி நிறுவன அலுவலா்கள், ஆசிரியா்கள், ஊழியா்கள், மாணவா்கள் ஆகியோரை பூஸ்டா் செலுத்திக் கொள்ள ஊக்குவிப்பதோடு, அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த ஏற்பாடு வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog