Breaking

Saturday, January 01, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் பயிற்சிக்கு 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

செங்கல்பட்டு மாவட் டம் நெம்மேலி, வைணவ பிரபந்த பாடசாலையில், நாலாயிர திவ்ய பிரபந்தம் கற்று அறியும் பயிற்சிக்கு, விருப்பமுள்ள மாணவர் களிடம் இருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. ஹிந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை யின் வைணவ பிரபந்த பாடசாலை வருகிறது. இயங்கி அங்கு தங்கி பயில விரும்பும் மாணவர்களின் சேர்க்கைக்கான விண்ணப் பங்கள் வரவேற்கப்படு கின்றன. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, சீருடை, உறைவிட வசதிக ளுடன் கட்டணமில்லாமல் பயிற்சி வழங்கப்படும். ஊக்கத் தொகையாக ஒவ்வொரு மாதமும், 3000 ரூபாய் வழங்கப் படும். வைணவ பிரபந்த பயிற்சி பள்ளியில் சேர, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 14 முதல் 25 வயதுக்குட்பட்ட ஹிந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இரண்டு ஆண்டு காலம் தங்கி பயிற்சி பெற வேண்டும். சேர்க்கை படிவங்களை, அறக்கட்டளை அலுவல கத்தில் பெறலாம். அறநி லைத்துறையின் hrce.tn.gov. in என்ற இணையதளத்தி லும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட வி ண்ணப்பங்களை ஜனவரி 25ம் தேதிக்குள் அனுப்பிவைக்கவேண்டும் என அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog