மதிய உணவு திட்ட பெயர் மாற்றம் மறு பரிசீலனை செய்ய கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 20, 2021

Comments:0

மதிய உணவு திட்ட பெயர் மாற்றம் மறு பரிசீலனை செய்ய கோரிக்கை!

காங்., சட்டசபை தலைவர் செல்வப்பெருந்தகை சட்டசபையில் பேசியதாவது: பெட்ரோல் டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர நிதி அமைச்சர் முயற்சிக்க வேண்டும். எம்.ஜி.ஆர். மதிய உணவு திட்டத்தின் பெயரை மாற்றாமல் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் முதல்வர் 1 725 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார்.
காமராஜர் முதல்வராக இருந்த போது மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதிகாரிகள் நிதி இல்லை எனக் கூறியபோது பிச்சை எடுத்தாவது இந்த திட்டத்தை செயல்படுத்துவேன் எனக்கூறி செயல்படுத்தினார்.

அப்படிப்பட்ட திட்டத்தை 1991ல் பெயர் மாற்றம் செய்தனர். அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர் காமராஜர். அவர் மதிய உணவு திட்டத்தை எட்டயபுரத்தில் துவக்கினார். இந்த திட்டத்தில் கருணாநிதிக்கும் சொந்தம் உள்ளது. சத்துணவில் முட்டை மற்றும் ஊட்டச்சத்து கொடுத்தார். வரலாற்று திரிபுகளை முதல்வர் அனுமதிக்கக் கூடாது. இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு பேசினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews