Breaking

Tuesday, August 17, 2021

தமிழகத்தில் மேலும் 1804 பேருக்கு கரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 1,804 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் 1,50,724 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 1,804 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 1,917 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 32 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,92,436 ஆக உயர்ந்துள்ளது. இதில் 25,37,632 பேர் குணமடைந்துவிட்டனர். 34,579 பேர் பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 20,225 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog