ஆதார் பதிவுக்கு பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தலாம் - UIDAI அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 21, 2021

Comments:0

ஆதார் பதிவுக்கு பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்தலாம் - UIDAI அறிவிப்பு

பள்ளி ஐ.டி., கார்டு போதும்! இனி, ஆதார் பதிவு எளிதாகும்

ஆதார் பதிவுக்கு, 2019 -20ம் கல்வியாண் டுக்கான பள்ளி அடையாள அட்டையை பயன்படுத்திக்கொள்ளலாம் என, ஒருங்கி ணைந்த அடையாள அட்டை ஆணையம் (UIDAI) அறிவித்துள்ளது. குழந்தைகளுக்கு ஆதார் பதிவு மற்றும் திருத்த பணிகளுக்கு முக்கிய ஆவணமாக, பள்ளி அடையாள அட்டை பயன்படுத்தப் படுகிறது. கொரோனா சூழல் காரணமாக கடந்த மார்ச் முதல் வீட்டிலிருந்து ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் படிப்பதால், பல பள்ளிகளில் அடையாள அட்டை வழங்கப் படவில்லை.

இந்நிலையில், ஆதார் பதிவு மற்றும் திருத்த பணிகளுக்கு, கடந்த, 2019 - 20ம் கல்வி யாண்டுக்கான அடையாள அட்டையை பயன்படுத்திக்கொள்ளலாம் என, ஒருங்கி ணைந்த அடையாள அட்டை ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி, வங்கி, தபால் நிலையங்கள் உள்பட ஆதார் பதிவுக்காக அங்கீகரிக் கப்பட்ட அரசு, தனியார் நிறுவனங்கள் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், 2019-20ம் கல்வியாண்டுக்கான பள்ளி அடை யாள அட்டையை ஆவணமாக சமர்ப்பித்து வரும் டிச.,31ம் தேதி வரை ஆதார் பதிவு மற்றும் திருத்தப்பணிகளை மேற்கொள்ளலாம்' என தெரிவித்துள்ளது. வைரஸ் பரவல் காரணமாக தபால் நிலை யங்களில், ஆதார் பணிகளுக்கு தமிழக தபால் வட்டம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews