NEET தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் தெளிவான கொள்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 12, 2021

Comments:0

NEET தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் தெளிவான கொள்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

"தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் தெளிவான கொள்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை:

நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழ்நாடு அரசின் தெளிவான கொள்கை என தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (12-7-2021) பேட்டி அளித்துள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு (NEET) செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என மத்திய கல்வித் துறை தர்மேந்திர பிரதான் இன்று (12-7-2021) அறிவித்தார். நீட் தேர்வு வேண்டாம்

நீட் தேர்வு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், நீட் தேர்வு குறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். விவரம் வருமாறு:

நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் தெளிவான கொள்கை. 100% எண்ணம்.

நீட் தேர்வு ஆய்வுக்குழு தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது

உயர்நீதிமன்றத்தில் நீட் வழக்கு விசாரணையின் போக்கை பொறுத்து, தமிழ்நாடு அரசு உரிய அறிவிப்பு வெளியிடும்;

மாணவர்களுக்கு சிறிய அளவிலான இடர்பாடு கூட வரக்கூடாது என்பதற்காகவே நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது

நீட் தேர்வுக்கு விலக்கு பெறும்வரை மாணவர்களுக்கு பயிற்சி தொடர்ந்து அளிக்கப்படும்.

இருப்பினும் நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் தயாராக வேண்டும்.

என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியில் கூறியுள்ளார். “மாணவர்களுக்கு சிறிய அளவிலான இடர்பாடு கூட வரக்கூடாது என்பதற்காகவே நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது, நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்”

நீட் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தமிழக அரசின் தெளிவான முடிவு பின்னர் அறிவிக்கப்படும்..

- மா.சுப்பிரமணியன், சுகாதார துறை அமைச்சர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews