Breaking

Wednesday, July 21, 2021

அஞ்சல் ஊழியர் மூலம் ஆதாரில் செல்லிடப்பேசி எண்ணை மாற்றும் வசதி

அஞ்சல் ஊழியர் மூலம் ஆதாரில் செல்லிடப்பேசி எண்ணை மாற்றும் வசதி

புது தில்லி, ஜூலை 20: தனிநபர்கள் தங்கள் ஆதாரில் இணைக்கப்பட் டுள்ள செல்லிடப்பேசி எண்ணை அஞ்சல் ஊழியர் மூலம் தங்கள் வீட்டில் இருந்தபடியே மாற்றிக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியும், ஆதார் ஆணையமும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. 650 இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கிகள், அஞ்சல் ஊழியர் மற் றும் கிராப்புற அஞ்சலக சேவகர் மூலம் இந்த சேவை அளிக்கப்பட வுள்ளது. இது இணையதள வசதி உள்ளிட்டவை கிடைக்காத கிரா மப்புற மக்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியின் தலைவர் ஜெ.வெங்கடராமு தெரி வித்துள்ளார்.

இப்போதைய நிலையில் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி,ஆதா ரில் செல்லிடப்பேசி எண்ணை மாற்றும் வசதியை மட்டும் அளிக்கி றது. விரைவில் சிறார்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கு வதற்கான சேவைகளை அளிக்க இருக்கிறது.

2021 மார்ச் மாத இறுதி வரை 128.99 கோடி ஆதார் எண்களை ஆதார் ஆணையம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog