அரசு கல்லூரிகளாக மாறியும் மாறாத சம்பளம் கவலையில் கவுரவ விரிவுரையாளர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 23, 2021

Comments:0

அரசு கல்லூரிகளாக மாறியும் மாறாத சம்பளம் கவலையில் கவுரவ விரிவுரையாளர்கள்

தமிழகத்தில் அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்ட பின் அதில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஓராண்டாக கற்பித்தல் இல்லை ஆசிரியர்களுக்கு மேலும் சலுகை
தமிழகத்தில் 143 அரசு கலை கல்லுாரிகள் உள்ளன. இதில் பல்கலை உறுப்பு கல்லுாரிகளாக இருந்து அரசு கல்லுாரிகளாக மாற்றம் செய்யப்பட்டவை 41. அரசு கல்லுாரியாக மாறிய பின் இங்கு பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு யு.ஜி.சி., விதிப்படி அதற்கேற்ற சம்பளம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து அரசு கல்லுாரி யு.ஜி.சி., தகுதி கவுரவ விரிவுரையாளர்கள் சங்க மாநில தலைவர் தங்கராஜ் கூறியதாவது:அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் சம்பளத்தை ரூ. 15 ஆயிரத்தில் இருந்து ரூ. 20 ஆயிரமாக அரசு உயர்த்தியது. ஆனால் ஏப்., 20ல் தான் கல்லுாரிக் கல்வி இயக்குனர் அனைத்து பல்கலை பதிவாளருக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.
ஓராண்டாக கற்பித்தல் இல்லை ஆசிரியர்களுக்கு மேலும் சலுகை
கொரோனா பேரிடரை கருத்தில்கொண்டு சம்பள உயர்வை உடன் வழங்க வேண்டும். யு.ஜி.சி., பரிந்துரைத்த ரூ. 50 ஆயிரம் சம்பளம் தகுதியான அனைத்து கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews