Breaking

Thursday, April 22, 2021

அரசு பள்ளி கட்டடம் புதுப்பிக்க ஆய்வு

தங்கவயல்: சிதிலமடைந்துள்ள, பாரண்டஹள்ளி அரசுப் பள்ளி கட்டடத்தை புதுப்பிப்பதற்காக, எம்.எல்.ஏ., மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். தங்கவயல் பாரண்டஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி, 70 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சிதிலமடைந்துள்ள இக்கட்டடத்தை புதுப்பிக்க, கோலார் மாவட்ட கல்வி துறை, ஜில்லா பஞ்சாயத்து அதிகாரிகளிடம் கோரி வந்தனர்.தங்கவயல் காங்கிரஸ், எம்.எல்.ஏ., ரூபகலா, வட்டார கல்வி அதிகாரி கெம்பய்யா ஆகியோர் பாரண்டஹள்ளி அரசு பள்ளியை நேற்று பார்வையிட்டனர். ஆசிரியர்கள் வருகை ஏப்ரல் 30 வரை உறுதி செய்யப்படும்...
அப்போது, ரூபகலா கூறுகையில், &'&'பள்ளி கட்டடத்தை புதுப்பிக்க, கர்நாடக அரசிடம் சிறப்பு நிதி பெற்று தரப்படும்.&'&'இதற்கு தேவைப்படும் நிதி குறித்து பொறியாளர்களிடம் திட்டமிட்டு, விரைவில் கட்டடம் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.&'&'மாணவர்களுக்கு ஆரோக்கியம், சுகாதாரம், பாதுகாப்பு முக்கியம் என்பதால் இதுகுறித்து அரசிடம் தெரிவிப்பேன்,&'&' என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog