Breaking

Friday, March 19, 2021

கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

பேரவையில் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து கூறியதாவது: ஹொளேநரசிபுரா தொகுதியில்48 அரசு பள்ளிக்கூடம் உள்ளன. இந்த 48 பள்ளிக்கூடத்திற்கு 51 ஆங்கில மொழி போதிக்கும் ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 41 ஆங்கில பாடம் போதிக்கும் ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றி வருகின்றனர்.
GOVT AIDED POST - WANTED 18 ASSISTANT PROFESSORS - LAST DATE TO APPLY - 3.4.2021
காலியாக இருந்த 10 ஆசிரியர் பணியிடத்தால் பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் பாதிக்கப்படாத வகையில் 3 தற்காலிக ஆசிரியர்களை நியமித்துள்ளோம். இதுதவிர மற்ற பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் கூடுதலாக வகுப்புகள் எடுப்பதன் மூலமாக மாணவ மாணவிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுத்துள்ளோம். கடந்த பிப்ரவரி மாதம் 1ம்தேதி ஹொளேநரசிபுராவில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளோம். மாநில கல்வித்துறையில் 3590 பணியிடம் காலியாக இருக்கிறது.
அனைத்து கல்லுாரி பேராசிரியர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி துவக்கம்!
இதை நிரப்ப வேண்டும் என்பதற்காக நிதித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். விரைவில் காலி பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வோம், என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog