தமிழகத்திலும் பல்வேறு ஆலோசனைகளுக்கு பின்னர் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்பு இல்லாத காரணத்தால் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு பிப்ரவரி 8 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கியது. அதற்கடுத்த படியாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு அட்டவணையை வெளியிட்ட அரசு, 9 முதல் 11ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.
இதனால் புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் இம்முறை தாமதமாக திறக்கப்படும் என கூறப்படுகிறது. மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அதற்கடுத்த நாளே 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன. இதனால் அதன் தேதிகளை மாற்றி அமைத்து, புதிய கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு தேதியை அரசு உடனே அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.