1 முதல் 5ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் விரைவில் திறப்பு – நாகலாந்து மாநில அரசு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 15, 2021

Comments:0

1 முதல் 5ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் விரைவில் திறப்பு – நாகலாந்து மாநில அரசு அறிவிப்பு

நாகலாந்து மாநிலத்தில் விரைவில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை:
நாகலாந்து மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் தொற்றின் தாக்கம் சற்று குறைந்திருந்ததால் கடந்த ஜனவரி மாதம் முதல் உயர் வகுப்புகளுக்கான பள்ளிகள் முதல் கட்டமாக திறக்கப்பட்டது.
செவிலியர் படிக்க நீட் தேர்வா? பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கண்டனம்
பொதுத்தேர்வுகள்:
நாகலாந்து பள்ளிக்கல்வி வாரியமானது மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகளை நேரடி முறையில் நடத்துவதாக அறிவித்தது. அதன்படி, 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை முறையே ஏப்ரல் 6 மற்றும் 7ம் தேதிகளில் தொடங்க இருக்கிறது. தேர்வின் முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும். மேலும், செயல்முறைத் தேர்வுகள் பள்ளிகள் அளவில் நடத்திக் கொள்ள மாநில கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆரம்ப பள்ளி திறப்பு:
நாகாலாந்தின் மூத்த அமைச்சர் நீபா க்ரோனு அவர்கள் மாநிலத்தில் தொற்றின் தாக்கம் குறைந்து உள்ளதால் விரைவில் ஆரம்ப பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த வாரம் அறிவித்தார்.
கற்போம் எழுதுவோம் திட்டத்தில் தேர்வுகளை ரத்து செய்ய கோரிக்கை!
நாகலாந்து மாநிலத்தில் கடந்த வாரத்தில் முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தின் முடிவில், ஆரம்ப பள்ளிகளை திறக்க அனுமதிப்பதாக முதல்வர் அறிவித்தார். விரைவில் பள்ளிகளுக்கான பாதுகாப்பு விளக்க நடைமுறைகள் வெளியிடப்படும் என்று மாநில திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு அமைச்சர் அறிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews