Breaking

Monday, March 15, 2021

செவிலியர் படிக்க நீட் தேர்வா? பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கண்டனம்

பொதுக்கல்விக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ்கஜேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கை: இளநிலை செவிலியர்(பிஎஸ்சி நர்சிங்)படிப்பு, இளநிலை உயிரி அறிவியல், இளநிலை லைப் சயின்ஸ் போன்ற படிப்புகளில் மாணவர் சேர்க்கையின் போது நீட் தேர்வு அடிப்படையில் சேர்க்க வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேர்வுகளை விரைந்து முடித்து பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க உத்தரவு - கொரோனா மீண்டும் தீவிரமடைவதால் நடவடிக்கை
இது குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. எந்த வல்லுநர் குழுவும் நீட் தேர்வை பரிந்துரைக்காத நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு நீட் தேர்வு எதிரானது. ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை பறித்ததுடன்,. வரும் 2021-2022ம் கல்வி ஆண்டில் அனைத்து பட்டப்படிப்புக்கும் மாணவர் சேர்க்கையை மேல்நிலைப் பள்ளிமதிப்பீட்டின் கீழ் தான் நடத்த வேண்டும். அடுத்த வருகின்ற தமிழக அரசு தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சட்டப் பேரவையில் தேசிய கல்விக் கொள்கை குறித்து முழுமையான விவாதம் நடத்த வேண்டும்.
வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பது பற்றிய ஒருநாள் பயிற்சி - 16-ந் தேதி நடக்கிறது
அதுவரை தேசிய கொள்கையின் நடைமுறை செயல்பாடுகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும். தேர்தல் நடக்கும் இந்த நேரத்தில் நீட் தேர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். வல்லுநர் குழுவும் நீட் தேர்வை பரிந்துரைக்காத நிலையில், நீட் தேர்வு அரசமைப்புச் சட்டத்துக்கு நீட் தேர்வு எதிரானது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog