ஆசிரியர்-அரசு ஊழியர்கள் 100% வாக்களிக்க தேர்தல் பணிபுரியும் இடத்திலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 05, 2021

Comments:0

ஆசிரியர்-அரசு ஊழியர்கள் 100% வாக்களிக்க தேர்தல் பணிபுரியும் இடத்திலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Election-centers-should-be-allotted-considering-female-employees-..-Tamil-Nadu-Teachers-Union-demand%2521
ஆசிரியர்-அரசு ஊழியர்கள் 100% வாக்களிக்க தேர்தல் பணிபுரியும் இடத்திலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் விடுத்துள்ள அறிக்கையின் முழு விவரம்.
IMG_20210305_171009

.com/blogger_img_proxy/பிளஸ் டூ மாணவனுக்கு கொரோனா.: உடன் பயின்ற மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் ஜனநாயகக் கடமையாற்றக் காத்திருக்கின்றோம்.
தேர்தல்பணி சிறப்பாக நடைபெறும்வகையில் கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றி உதவிட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறேன்.

vijayanagaram-poling-jpg

ஆசிரியர்-அரசு ஊழியர்களின் வாக்குகள் நூறு சதவீதம் பதிவாகும் வகையில் பணிபுரியும் வாக்குச்சாவடியிலேயே வாக்களிக்க ஏற்பாடு செய்யவேண்டும். ஆசிரியர்-அரசு ஊழியர்கள் பணிபுரியும் வாக்குச்சாவடிகள் கடந்தமுறை 100 கி.மீட்டருக்கும் அதிகம் தொலைவில் அமைத்ததால் பெண் ஊழியர்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளானதால் வாக்குச்சாவடிகள் 10 கி.மீட்டருக்குள் பணியமர்த்திடவேண்டும்.

.com/blogger_img_proxy/TEACHERS WANTED (2021-2022) All Subjects - Whats App & Mail your resume on are before (12.03.2021).
ஆசிரியர்-அரசு ஊழியர்கள் வாக்குப்பதிவு முன்நாள் மதியம் சென்று மறுநாள் இரவு வாக்கு எந்திரங்கள் அனுப்பிவைக்கும் வரை பணிமேற்கொள்வதால் தேர்தல் நாளன்றும் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்போதும் தேர்தல் ஆணையமே உணவு வழங்கிடவேண்டும்.

voting-machine-jpg

IMG_20210305_171009

கொரோனா பெருந்தொற்றால் தனிமைப்படுத்தபட்டவர்களுக்கு தபால் வாக்கு வழங்கவேண்டும். வாக்குச்சாவடிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கவேண்டும். வாக்காளர்களுக்கு சானிடைசர் வழங்கி பாதுகாப்பினை உறுதிசெய்யவேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்-அரசு ஊழியர்கள் தேர்தல்பணி முடிந்ததும் இரண்டு நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள விடுப்பு வழங்கவேண்டும்.
.com/blogger_img_proxy/பிளஸ் டூ மாணவனுக்கு கொரோனா.: உடன் பயின்ற மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை
மேற்கண்டக் கோரிக்கையினை நிறைவேற்றி ஆசிரியர்-அரசு ஊழியர்கள் தடையின்றி ஜனநாயகக்கடமையாற்றிட ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன். என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84730452