வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் பயிற்சி 03.04.2021 அன்று நடைபெறும் - CEO Proceedings - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 31, 2021

Comments:0

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் பயிற்சி 03.04.2021 அன்று நடைபெறும் - CEO Proceedings

நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 ல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் பயிற்சி வகுப்பானது ( 2nd Repeat Training Class ) , வருகின்ற 03.04.2021 ( சனிக் கிழமை ) அன்று காலை 9.30 மணிக்கு , அந்தந்த சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பயிற்சி மையங்களில் ( அதாவது கடந்த 26.03.2021 அன்று நடைபெற்ற அதே பயிற்சி மையத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்பிற்காக தனியாக தகவல் ஆணை அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி 03.04.2021 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட திருப்புதல் பயிற்சி ( 2nd Repeat Training Cass ) வகுப்பிற்கு வாக்குச்சாவடி அலுவலர்களை , மாவட்ட ஆட்சியர் அவர்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி , அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள ( instructed to ensure that there are no absentees on 03.04.2021 ) அறிவுறுத்துமாறு சம்மந்தப்பட்ட அலுவலக தலைவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள்மீது , தேர்தல் நடத்தை விதிகளின்படி , உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews