பிப்ரவரி 21ம் தேதி NMMS தேர்வுகள் – ஏற்பாடுகள் தீவிரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 16, 2021

Comments:0

பிப்ரவரி 21ம் தேதி NMMS தேர்வுகள் – ஏற்பாடுகள் தீவிரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 31 மையங்களில் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை பெற தேசிய திறனறிதல் தேர்வு பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெறுகிறது.
NMMS தேர்வுகள்:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உதவித்தொகை பெற தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிதல் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகள் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 32 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. BEO to HS HM Panel Preparation - DEE Proceedings!
நடப்பு கல்வியாண்டில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் இந்த தேர்வில் கலந்து கொள்ளலாம். இந்த ஆண்டு தேர்வை 3224 மாணவர்கள் எழுத உள்ளனர். தேர்வு எழுதுள்ள மாணவர்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வுக்கு வரும்போது கொரோனா விதிகளை பின்பற்றி தேர்வுகள் நடத்த பள்ளிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews