Breaking

Thursday, February 18, 2021

பட்டதாரி ஆசிரியர்களுக்கு கிடைக்குமா பதவி உயர்வு?

தொடக்கக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும்&' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, பள்ளிக் கல்விச் செயலர், இயக்குனரிடம், கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரைமண்ட் அளித்துள்ள மனு:

26 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் விரைவில் பதவி உயர்வு மூலம் நிரப்பும் பொருட்டு சார்ந்த அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் விபரங்களை சரிபார்த்து அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

தொடக்கக் கல்வித் துறையில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களில், கல்வி தகுதியும் அனுபவமும் உள்ளவர்களுக்கு, முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, 2020 பிப்ரவரியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களை நிரந்தர பணியில் அமர்த்த முடியாது.: அமைச்சர் செங்கோட்டையன்

தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மேல்நிலை பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக, ௫ சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, நீதிமன்றம் பரிந்துரைத்து உள்ளது. அதை தாமதமின்றி, அமல்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog