திறம்பட பணியாற்றாத 340 அரசு அதிகாரிகளுக்கு மத்திய அரசு முன்கூட்டியே ஓய்வு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 12, 2021

Comments:0

திறம்பட பணியாற்றாத 340 அரசு அதிகாரிகளுக்கு மத்திய அரசு முன்கூட்டியே ஓய்வு!

மத்திய அரசு பணிகளில் கடந்த ஆறு ஆண்டுகளாக திறம்பட பணியாற்றாத 340 அரசு அதிகாரிகளுக்கு மத்திய அரசு முன்கூட்டியே ஓய்வு அளித்துள்ளததாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மத்திய அரசு பணியாளர்கள்:

மத்திய அரசின் பணியாளர் துறை தெரிவித்தது படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் வரம்பு 38,02,779 ஆகும். இதில், தற்போது 31,18,956 பேர் பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசு தனது பணியாளர்களை மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்கிறது.

Tamil Nadu Maritime Academy-STCW Course Schedule (Non Residential) - PDF

பல்வேறு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளிலும் கடந்த 6 ஆண்டுகளாக மத்திய அரசின் குரூப் ஏ பிரிவில் 171 அதிகாரிகள் மற்றும் குருப் பி பிரிவில் 169 அதிகாரிகள் திறமையாக பணியாற்றாத காரணத்தினால் மத்திய அரசு முன்கூட்டியே ஓய்வு அளித்து உள்ளது. புதிய நியமனம்:

பொது மக்களின் நலன் மற்றும் அரசின் தரம் கருதி திறமையற்ற மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளான அதிகாரிகளுக்கு முன்னதாக ஓய்வு அளிக்க சட்டத்தில் இடமுள்ளது. அதனால் தான் முன்கூட்டியே அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அரசின் இலவச ‘நீட்’ பயிற்சி வகுப்புக்கு மாணவர்கள் வருகை குறைவு
மத்திய அரசில் ஓய்வு பெற்றவர்கள், பதவி விலகல், மரணம் மற்றும் பதவி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் பல ஆயிரக்கணக்கான காலிப்பணி இடங்கள் உள்ளது. இந்த பணி இடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews