பிப்ரவரி 19 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 07, 2021

Comments:0

பிப்ரவரி 19 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: தமிழக அரசு சார்பில் படித்து வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் நலனுக்காக பல்வேறு மாநிலங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் பல லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி 19 ஆம் தேதி புதுக்கோட்டையில் உள்ள இலுப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இலுப்பூரில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஏற்கனவே இரண்டுமுறை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 185 முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. அதில் 13,765 பேர் கலந்து கொண்டதாகவும் அவர்களில் 3160 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்றதொரு முகாம் வருகிற 19 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த முகாம் இலுப்பூரில் உள்ள மதர்தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 130 தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. மேலும் இந்த முகாமில் வேலைவாய்ப்புத் துறை மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வழங்க ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் கலந்து கொள்ள 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ படித்த 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ் மற்றும் சுயகுறிப்பு விவரங்களுடன் கலந்து கொள்ளலாம். மேலும் முகாமில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள் குறித்த விவரங்களை அறிய www.tnprivatejobs.in.gov.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews