வரும் 6ந்தேதி தொழில்நுட்ப கல்லூரிகளை மீண்டும் திறக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 05, 2021

Comments:0

வரும் 6ந்தேதி தொழில்நுட்ப கல்லூரிகளை மீண்டும் திறக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுச்சேரியில் வரும் 6ந்தேதி தொழில்நுட்ப கல்லூரிகளை மீண்டும் திறக்க உயர்நிலை கல்வி துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது. நாடெங்கும் கொரோனா தொற்று பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த மற்றொரு புதிய கொரோனா வைரசானது கண்டறியப்பட்டது. இது, எளிதில் பரவ கூடிய தன்மை கொண்டுள்ளது.
இதனால், 2வது வகை கொரோனா பரவல் இந்தியா உள்பட பல நாடுகளிலும் ஏற்பட தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரசின் பாதிப்புகளை முன்னிட்டு நாடு முழுவதும், கடந்த ஆண்டு மார்ச்சில் பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன. இதனால் மாணவ மாணவியரின் எதிர்காலம் பாதிப்படைந்தது. இந்த சூழலில், புதுச்சேரியில் இன்று (திங்கட்கிழமை) 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் முன்பே தெரிவித்தார். எனினும் இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு மருந்துகள் முழுமையாக கிடைப்பதற்கு முன், பாதுகாப்பற்ற சூழலில் மாணவ மாணவியர்கள் வகுப்புகளுக்கு செல்வதற்கு ஒரு சில பெற்றோரும் தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரியில் வருகிற 6ந்தேதி தொழில்நுட்ப கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான உத்தரவை புதுச்சேரி உயர்நிலை கல்வி துறையானது இன்று பிறப்பித்து உள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews